by admin on | 2025-10-01 08:52 PM
திண்டுக்கல் அருகே திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது.
திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் எரியோடு, மத்தனம்பட்டியை சேர்ந்த ராஜகோபால் மகன் சிவகுமார்(36) என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனைத்தொடர்ந்து சிவக்குமார் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இதுதொடர்பாக புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ், காவலர் சரவணகுமார் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு சிவகுமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.
செய்தியாளர் மோகன் கணேஷ் திண்டுக்கல் -
அலுவலகத்திலேயே டிஜிபி தற்கொலை...! முதல்வர் நேரில் விரைந்தார்...!
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு...! எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு...! அமைச்சர் வன்னி அரசு காரசார எச்சரிக்கை...!
24 மணி நேரமும் சட்டவிரோத விற்பனை...! கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்....!
எம்எல்ஏ கைது....! "சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா.?" - கடும் கண்டனம்....!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி....! நிர்வாகம் உடனடி விளக்கம்....!