by Vignesh Perumal on | 2025-08-05 10:32 AM
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தொலைபேசி மற்றும் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் நேர்முக உதவியாளர், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ராமதாஸ் அவர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் அவரது வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆகியவை மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு தனிப்பட்ட தாக்குதல் மட்டுமல்லாமல், அரசியல் நோக்கங்களுக்காகச் செய்யப்பட்டுள்ள ஒரு செயல் என்றும், இதன் மூலம் ராமதாஸின் தனிப்பட்ட மற்றும் அரசியல் செயல்பாடுகளை உளவு பார்க்க முயற்சி நடப்பதாகவும் பா.ம.க.வினர் சந்தேகிக்கின்றனர். இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரூப் 2, 2ஏ தேர்வு...! நடத்த முடியாத ஆட்சி...! எடப்பாடி கடும் கண்டனம்...!
செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு - எம்எல்ஏ வை கைது செய்யாதது ஏன் ?
போதை தடுப்பு நீதிமன்றத்தில் நான்கு பேருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல்....!!!
தேசிய அளவில் முக்கிய பொறுப்பு அண்ணாமலை க்கு.....!!!
தமிழக அரசியலில் அடிமை என்ற சொல் புதிதல்ல....?????