by admin on | 2025-02-17 04:55 PM
தமிழகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப காவல்துறையினர் பணியில் இல்லை. இருந்த போதிலும் தற்பொழுது பணியாற்றி வருகின்ற காவல் துறையினர் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர். இவர்கள் குற்றவாளிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்கின்ற பொழுது அரசு பேருந்துகளில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்ற ஒரு பெரும் பிரச்சனை ஏற்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்து துறை கண்டித்து பெரும் அமலில் ஈடுபட்டனர். இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் காவல்துறையினர் அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு இலவச பாஸ் வழங்க
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்
இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் போலீசாருக்கு இலவச பஸ் பாஸ் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வழங்கினார். இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறையினர் பணியின்போது பேருந்தில் பயணம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இலவசபேருந்து ஸ்மார்ட் கார்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மாவட்ட காவல் துறையினருக்குவழங்கினார்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!