| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

ராட்சச குழாய் விபத்து...! அதிர்ஷ்டவசமாக தப்பி உயிர்...!

by Vignesh Perumal on | 2025-04-30 03:37 PM

Share:


ராட்சச குழாய் விபத்து...! அதிர்ஷ்டவசமாக தப்பி உயிர்...!

தஞ்சாவூரில் இருந்து திருவாரூருக்கு குடிநீர் இரும்பு குழாய்களை ஏற்றி வந்த லாரி ஒன்றின் கயிறு அறுந்ததால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இன்று (ஏப்ரல் 30, 2025) தஞ்சாவூர் - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட பெரிய அளவிலான இரும்பு குடிநீர் குழாய்கள் கயிறு அறுந்ததால் சாலையில் உருண்டன. அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஒரு கார் மீது உருண்டு விழுந்ததில் கார் சேதமடைந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். குழாய்களை சரியாக கட்டாததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, கார் ஓட்டுநர் மற்றும் அதில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.


சேதமடைந்த கார் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment