| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

உதட்டை கடித்து, துண்டித்து எடுத்துச் சென்ற இராணுவ வீரர்...! பரபரப்பு...!

by Vignesh Perumal on | 2025-04-30 02:42 PM

Share:


உதட்டை கடித்து, துண்டித்து எடுத்துச் சென்ற இராணுவ வீரர்...! பரபரப்பு...!

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவரை தட்டிக்கேட்ட பெண்ணின் கணவரை அவர் கடித்து உதட்டை துண்டித்து எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் இன்று (ஏப்ரல் 30, 2025) புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அந்த நபர், அப்பகுதியில் வசிக்கும் திருமணமான பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அப்பெண்ணை அவர் தகாத முறையில் தொட்டபோது, இதை பார்த்த பெண்ணின் கணவர் அவரை தட்டிக்கேட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர், பெண்ணின் கணவரை தாக்கியுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த வீரர் திடீரென பெண்ணின் கணவரின் உதட்டை கடித்து துண்டித்து கவ்விக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த பெண்ணின் கணவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஓய்வு பெற்ற ராணுவ வீரரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. போலீசார் விரைந்து குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment