| | | | | | | | | | | | | | | | | | |
சினிமா General

படத்தைத் தடை செய்க..! இல்லையெனில் கடும் விளைவுகள்..! சீமான் எச்சரிக்கை...!

by Vignesh Perumal on | 2026-03-03 03:12 PM

Share:


படத்தைத் தடை செய்க..! இல்லையெனில் கடும் விளைவுகள்..!  சீமான் எச்சரிக்கை...!

சமீபத்தில் வெளியாகி விவாதங்களைக் கிளப்பியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ திரைப்படத்தைத் தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இஸ்லாமிய மக்களைத் திட்டமிட்டு இழிவுபடுத்தும் வகையிலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களைத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இத்தகைய போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

முதல் பாகத்தின் போதே தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், தற்போது அதன் நீட்சியாக வந்துள்ள இரண்டாம் பாகத்தையும் தமிழகம் முழுவதும் திரையிடத் திமுக அரசு அனுமதி அளித்திருப்பது வெட்கக்கேடானது. சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று கூறிக்கொள்ளும் திமுக அரசின் இந்த நடவடிக்கை முரணானது என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

"மதம், வழிபாடு, உணவு, உடை போன்றவை ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமைகளாகும். அதில் தலையிடவோ அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தினரைத் தாழ்த்திப் பேசவோ அரசு உட்பட யாருக்கும் உரிமையில்லை," எனச் சீமான் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.


இந்தப் படத்தைத் தமிழக அரசு உடனடியாகத் தடை செய்யாவிட்டால், மாநிலத்தின் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டுத் தங்களது கட்சி சார்பில் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்றும், அதன் விளைவுகளை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

2023-ல் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் தொடர்ச்சியாக, பிப்ரவரி 27, 2026 அன்று இந்த இரண்டாம் பாகம் வெளியானது. ஏற்கனவே கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் போராட்டங்களைச் சந்தித்த இந்தப் படம், தற்போது தமிழகத்திலும் அரசியல் ரீதியான எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.












நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment