by admin on | 2026-06-08 02:32 PM
தேனி மாவட்டம் பழனி செட்டி பெட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 2018 மற்றும் விதிகள் 2023 மற்றும் அரசாணைகளுக்கு விரோதமாக பள்ளி அங்கீகாரம் பெறாமல் பள்ளிக்கு மாணவர்களை அமர வைக்க எந்தவித பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் சிவில் கோர்ட்டில் நிரந்தர தடை அணி பெற்றுள்ள தனி நபருக்கு சொந்தமான இடத்தில் துணியிலிருந்து மாணவர்களை அமர வைத்து தனி நபர்கள் இடத்தை ஆக்கிரமிக்கவும் சட்டம் ஒழுங்கு குலைக்கவும் முயற்சித்ததால் பள்ளி துவங்கும் முதல் நாளான ஜூன் மாதம் நான்காம் தேதி தேனி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கல்வித் துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து மாணவர்களின் நலன் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படாமல் தடுத்து அனிமல் அனுமதிக்கப்படாத தனி நபருக்கு சொந்தமான பள்ளி அனுமதிக்கப்படாத கட்டிடத்தில் பள்ளி நடத்தக் கூடாது என்றும் பள்ளிக்கு அனுமதிக்கப்பட்ட கட்டடத்தில் மட்டுமே பள்ளி நடத்த வேண்டும் என்றும் பேசி முடிவெடுக்கப்பட்டது மேலும் தேனி மாவட்டம் பழனி செட்டி பெட்டியில் செயல்படும் மதுரை சி இ ஓ ஏ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்றும் பள்ளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தடை செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
மாணவர்களின் நலனை காக்கவும்,பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் தங்க ராஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கு, கல்வி சட்டப்படி பள்ளியை நடத்து, அங்கீகாரம் இல்லாமல் பள்ளி நடத்தக் கூடாது, மாணவர்கள் எதிர்காலத்தை கெடுக்காதே, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் உரிய நடவடிக்கை எடு,போலியாக பள்ளி நடத்த அனுமதிக்காதே, அங்கீகாரம் இல்லாத பள்ளியில் மாணவர் சேர்க்கை செய்தால் சான்றிதழ்கள் செல்லுபடியாகுமா, போன்ற கோஷங்களை எழுப்பி மாணவர்கள் நலனை பாதுகாக்க போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர்
இரண்டு பள்ளி மாணவர்கள் கொடூர கொலை ! கொலைகாரன் கைது !!
உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவி கொலை....??? கணவன் கைது....!!!
நான் ரெடி முதல்வர் விஜய் .!!!! நீங்கள் ரெடியா...???
இளைய தலை முறை மக்கள் நல பாதுகாப்பு இயக்கம் துவக்கம்...!!!
போலீஸ் அதிகாரியாக அன்று - அரசு பள்ளி ஆசிரியராக இன்று ! சீமா அகர்வாலின் சேவை !!