by Vignesh Perumal on | 2025-09-16 10:48 AM
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள வீரசின்னம்பட்டி கிராமத்தில், பேருந்து தாமதமாக வந்ததைக் கண்டித்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீரசின்னம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், தினமும் அரசுப் பேருந்துகள் குறித்த நேரத்தில் வருவதில்லை எனப் புகார் தெரிவித்து வந்தனர். இதனால், பள்ளி நேரங்களில் மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாமலும், பொதுமக்கள் தங்களது வேலைகளுக்குச் செல்ல முடியாமலும் சிரமப்பட்டு வந்தனர்.
இன்று (செப்டம்பர் 16, 2025) காலையும் வழக்கம் போல் பேருந்து தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உதவியுடன் அரசுப் பேருந்தைச் சிறைபிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "நாளை முதல் குறித்த நேரத்தில் பேருந்து இயக்கப்படும்" என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். அதிகாரிகளின் இந்த உறுதிமொழி, அப்பகுதி மக்களுக்கு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!