| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கோரவிபத்து விபத்து..! தண்ணீர் லாரி மோதி இருவர் படுகாயம்..!

by Vignesh Perumal on | 2025-09-11 05:57 PM

Share:


கோரவிபத்து விபத்து..! தண்ணீர் லாரி மோதி இருவர் படுகாயம்..!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த ஒட்டன்சத்திரம் - தாராபுரம் நெடுஞ்சாலையில், தண்ணீர் லாரி மோதியதில் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணித்த இருவர் காயமடைந்தனர்.

இன்று (செப்டம்பர் 11, 2025) மதியம், ஒட்டன்சத்திரம் - தாராபுரம் நெடுஞ்சாலையில் உள்ள தங்கச்சியம்பட்டி அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. வேகமாக வந்த தண்ணீர் லாரி ஒன்று, முன்னால் சென்ற கார் மீது மோதியது.

இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதி மக்கள் உடனடியாகக் காயமடைந்தவர்களை மீட்டு, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment