by Vignesh Perumal on | 2025-09-03 12:46 PM
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரை ஒருங்கிணைக்க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் திட்டமிட்டு வருவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.
கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கே.ஏ.செங்கோட்டையன், கடந்த சில நாட்களுக்கு முன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது, “பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளை மீண்டும் ஒன்றுசேர்த்து, கட்சியை பலப்படுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோருடன் செங்கோட்டையன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து அவர் பேசி வருவதாகவும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. மேலும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்கள் குழு....
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!