| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

தலைகீழாக தொங்கும் கேமரா...! நடவடிக்கை எடுக்க கோரிக்கை...!

by Vignesh Perumal on | 2025-09-02 03:22 PM

Share:


தலைகீழாக தொங்கும் கேமரா...! நடவடிக்கை எடுக்க கோரிக்கை...!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் உள்ள சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, கீழே பார்த்தவாறு பழுதடைந்துள்ளதால், அது செயல்படாத நிலையில் உள்ளது.

இந்த இடம், திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். ஏனெனில், இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) மற்றும் நீதிமன்றம் ஆகியவை அமைந்துள்ளன. மக்கள் அதிகம் கூடும் இந்தப் பகுதியில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மிகவும் அவசியம்.


பழுதடைந்த இந்த கேமராவை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றச் சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் இன்றியமையாதவை.





ஆசிரியர்கள் குழு....

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment