by admin on | 2025-09-01 05:57 PM
நீச்சல் குளத்தில் ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவு.
கேரளாவில் பரவும் அமீபா தொற்றுக்கு மூன்று மாத குழந்தை உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம்.தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு.
"நீச்சல் குளத்தில்" நாளொன்றுக்கு 2 முறை தண்ணீரை வெளியேற்றிவிட்டு குளோரின் பவுடர் தெளிக்க அறிவுறுத்தல். நீச்சல் குளம் உரிமையாளர்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவு.மாசடைந்த நீர் நிலைகளை குழந்தைகள் அணுகாமல் பெற்றோர் பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்தல்-பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் உத்தரவு.
ஆசிரியர் முத்துக்காமாட்சி 9842337244