by Vignesh Perumal on | 2025-09-01 02:57 PM
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அஇஅதிமுக) பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பின்படி, அஇஅதிமுகவின் அமைப்புச் செயலாளராக திரு. நாஞ்சில் M. வின்சென்ட், B.A., B.L., Ex. M.P., Ex. M.L.A., அவர்கள் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் துணை அமைச்சராகப் பணியாற்றியவர் என்பதுடன், நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்.
கழகத்தின் இந்த புதிய நியமனம் குறித்து, கழக உடன்பிறப்புகள் அனைவரும் திரு. நாஞ்சில் M. வின்சென்ட் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நியமனம் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
ஆசிரியர்கள் குழு....