| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

மனுக்கள் ஆற்றில் வீச்சு...! வட்டாட்சியர் புகார்..!

by Vignesh Perumal on | 2025-08-30 04:46 PM

Share:


மனுக்கள் ஆற்றில் வீச்சு...! வட்டாட்சியர் புகார்..!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது திருப்புவனம் வட்டாட்சியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய 'உங்களுடன் ஸ்டாலின்' நிகழ்ச்சியின்போது, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒரு மூட்டையில் ஆற்றில் வீசப்பட்டுக் கிடந்தன. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து விளக்கம் அளித்த திருப்புவனம் வட்டாட்சியர், ஆற்றில் வீசப்பட்ட மனுக்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்ட பிறகு, அந்தப் பழைய மனுக்களை முறையாக அகற்றுவதற்குப் பதிலாக, யாரோ சிலர் ஆற்றில் வீசியிருக்கலாம் என்று அவர் சந்தேகம் தெரிவித்தார்.

மனுக்களை ஆற்றில் வீசியதன் மூலம் அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்ற அடையாளம் தெரியாத நபர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



ஆசிரியர்கள் குழு.....

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment