by Vignesh Perumal on | 2025-08-28 01:38 PM
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இரண்டு தனியார் பள்ளிப் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில், 23 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரணி அருகே உள்ள சீனிவாசபுரம் கூட்ரோடு பகுதியில் இந்த விபத்து நடந்தது. இரண்டு தனியார் பள்ளிப் பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் சென்றபோது, திடீரென ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில், பேருந்துகளில் பயணித்த மாணவர்கள் பலருக்குக் காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொதுமக்கள் மற்றும் போலீசார், காயமடைந்த மாணவர்களை மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்துகள் அதிக வேகத்தில் வந்ததா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்கள் குழு....
போதைப் பொருள் தடுப்பு, எதிரிகள் பரிவர்த்தனை குறித்து காவல்துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டம்....!!!!
உயர்ரக கஞ்சா கடத்தல் - கேரளா இளைஞர்கள் 6 பேர் கைது !
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!