by Vignesh Perumal on | 2025-08-28 01:25 PM
திருத்தணியைச் சேர்ந்த ஒரு சிறுமி, ஆந்திராவில் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, கருக்கலைப்பு செய்த ஆந்திர செவிலியர் உட்பட இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருத்தணி அருகே வசித்து வந்த 17 வயது சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து, திருத்தணியைச் சேர்ந்த ஹரிபாபு (35) என்பவர், சிறுமியை ஆந்திர மாநிலம் நகரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, செவிலியராகப் பணிபுரியும் வயலட் கனி (50) என்பவர், சிறுமிக்கு சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்துள்ளார்.
கருக்கலைப்புக்குப் பிறகு சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது. கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டதால், உடனடியாகத் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமி இறந்ததையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தது. விசாரணையில், ஆந்திராவில் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு நடந்ததும், ஹரிபாபு மற்றும் வயலட் கனி ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். இது போன்று சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்யும் நபர்கள் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் குழு....
மதசார்பற்ற கூட்டணி ஆலோசனைக் கூட்டம்....!!!
பறக்கும் படை அதிரடி...! 106 மதுபாட்டில்கள் பறிமுதல்..! திடுக்கிடும் தகவல்...!
மதுரை சித்திரை திருவிழாவின் தொன்மைக்கு சங்க இலக்கியத்தில் சான்று ★ எழுத்தாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ் புகழாரம்
கருத்தரிப்பு சிகிச்சையிலும் வந்துவிட்டது ஏ.ஐ., தொழில்நுட்பம் ★ சென்னை மருத்துவ கருத்தரங்கில் தகவல்
பதவியை எதிர்பார்த்து போட்டியா ? நீண்ட கால ஆசை - திருமா ! சட்டசபை தேர்தலில் களம் காணும் காரணம் என்ன ?