by Vignesh Perumal on | 2025-08-27 01:28 PM
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள காயல்பட்டிணத்தில், என்.டி.ஏ. கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை வாழ்த்தி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காயல்பட்டிணம் பகுதியில், சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக, பாஜக சார்பில் வாழ்த்துப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
நேற்று இரவு, மர்ம நபர்கள் அந்தப் பதாகையைக் கிழித்துச் சென்றுள்ளனர். இன்று காலை, பதாகை கிழிந்திருப்பதைக் கண்ட பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, காயல்பட்டிணம் பகுதியில் ஏராளமான பாஜகவினர் குவிந்துள்ளனர். அவர்கள் பேனர் கிழித்த மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்தச் சம்பவம், அப்பகுதியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், பதாகையை கிழித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம், அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதலாகவும் பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!