by Vignesh Perumal on | 2025-08-23 12:08 PM
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலையத்தின் முதல் ஆய்வாளராக சரவணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல் NIB பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இவர், தற்போது தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தாடிக்கொம்பு காவல் நிலையம் இதுவரை சார்பு ஆய்வாளர் காவல் நிலையமாகச் செயல்பட்டு வந்தது. தற்போது, காவல் நிலையத்தின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில், இது ஆய்வாளர் காவல் நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஆய்வாளர் சரவணன் முதல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அவர் இதற்கு முன்பு திண்டுக்கல் NIB (போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு) ஆய்வாளராகப் பணியாற்றி, அப்பகுதியில் பல முக்கிய வழக்குகளைக் கையாண்டுள்ளார்.
தாடிக்கொம்பு பகுதி, பல்வேறு குற்றச் சம்பவங்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கொண்ட ஒரு பகுதியாக உள்ளது. இந்த நிலையில், காவல் நிலையம் தரம் உயர்த்தப்பட்டு, புதிய ஆய்வாளர் பொறுப்பேற்றிருப்பது, பொதுமக்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சரவணனின் வருகை, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த உதவும் என்று மக்கள் நம்புகின்றனர்.
ஆசிரியர்கள் குழு......
போதைப் பொருள் தடுப்பு, எதிரிகள் பரிவர்த்தனை குறித்து காவல்துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டம்....!!!!
உயர்ரக கஞ்சா கடத்தல் - கேரளா இளைஞர்கள் 6 பேர் கைது !
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!