by Vignesh Perumal on | 2025-08-19 12:21 PM
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி (70), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவர் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜாவின் தாயார் ஆவார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரேணுகா தேவி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
அவரது மறைவு, டி.ஆர். பாலுவின் குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரேணுகா தேவியின் மறைவுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில், "அண்ணன் டி.ஆர். பாலுவின் துணைவியார் ரேணுகா தேவி மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இந்தத் துயரமான நேரத்தில், அண்ணன் டி.ஆர். பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் ரேணுகா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரேணுகா தேவியின் மறைவுக்குப் பிறகு, அவரது உடல் சென்னை, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் குழு.....
பான் கார்டு - புதிய நடைமுறை ! புதிய மாற்றங்கள் - உஷார் !!
மதசார்பற்ற கூட்டணி ஆலோசனைக் கூட்டம்....!!!
பறக்கும் படை அதிரடி...! 106 மதுபாட்டில்கள் பறிமுதல்..! திடுக்கிடும் தகவல்...!
மதுரை சித்திரை திருவிழாவின் தொன்மைக்கு சங்க இலக்கியத்தில் சான்று ★ எழுத்தாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ் புகழாரம்
கருத்தரிப்பு சிகிச்சையிலும் வந்துவிட்டது ஏ.ஐ., தொழில்நுட்பம் ★ சென்னை மருத்துவ கருத்தரங்கில் தகவல்