by Vignesh Perumal on | 2025-08-16 07:15 PM
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், தனது விசுவாசியான தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சிப்பதை அறிந்த அமைச்சர், உடனடியாக வீட்டின் வெளியே வந்து அவரைத் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதை அறிந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள், அவரது வீட்டின் முன்பு குவிந்து மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பி வந்தனர். அப்போது, அமைச்சர் ஐ. பெரியசாமியின் தீவிர ஆதரவாளர் ஒருவரான தொண்டர், திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இந்தச் சம்பவத்தைப் பார்த்த அருகில் இருந்த மற்ற திமுக தொண்டர்கள் உடனடியாகச் செயல்பட்டு, பெட்ரோல் கேனை அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவம் நடந்த அதே நேரத்தில், வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த அமைச்சர் ஐ. பெரியசாமி, தனது விசுவாசி தீக்குளிக்க முயற்சிப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, அவரை அமைதியாக இருக்குமாறு சமாதானப்படுத்தி, அன்புடன் ஆறுதல் கூறிவிட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்றார்.
அமைச்சரின் இந்தச் செயல், தொண்டர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம், சோதனையின்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையை மேலும் அதிகரித்தது.
அமைச்சர் ஐ. பெரியசாமிக்குச் சொந்தமான சென்னை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள வீடுகள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனைக்கு அரசியல் ரீதியான எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் சோதனையின் தீவிரத்தையும், அரசியல் விளைவுகளையும் உணர்த்துகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்
போதைப் பொருள் தடுப்பு, எதிரிகள் பரிவர்த்தனை குறித்து காவல்துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டம்....!!!!
உயர்ரக கஞ்சா கடத்தல் - கேரளா இளைஞர்கள் 6 பேர் கைது !
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!